மீண்டும் மீண்டும் காதலில் விழும் ஐஸ்வர்யா தனுஷ் - புதிய முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Pre production in progress….#thankful #grateful #blessed pic.twitter.com/2lefC5y9bF
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 21, 2022
இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற காதல் ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் முசாஃபிர் (தமிழில் பயணி) மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியில் மீனு அரோரா தயாரிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ‘Oh Saathi Chal’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த Oh Saathi Chal திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட உண்மை காதல் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது என்று கூறப்படுகிறது. தற்போது ஸ்க்ரிப்ட் பணிகள் நடைபெறுகிறது என்றும் நடிகர் நடிகைகள் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.