இரவில் அனிருத்துடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா - உச்சபட்ச கோபத்தில் நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஸை பிரிந்த ஐஸ்வர்யா இரவு நேரங்களில் தன்னை விட சிறிய வயது கொண்ட ஒருவருடன் ஊர் சுற்றி வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூகவலைதள பக்கங்களில் அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் மீண்டும் சேர்பார்கள் என்று எதிர்பாரத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
ஐஸ்வர்யா சேர நினைத்த நேரத்தில் தனுஷ் விலகி சென்ற நிலையில் இருவரும் சேர்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கதில் வெளிவந்த முசாபிர் ஆல்பம் பாடலுக்கு நடிகர் தனுஸ்,ஐஸ்வர்யாவை தோழி என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் இனி சேர்வது கடவுள் கையில் மட்டுமே இருப்பதாக கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
இதனிடையே இரவு நேரத்தில் தன்னை விட சிறிய வயதுகாரரான அனிருத்துடன் காரில் ஊர் சுற்றி வருவதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
ஐஸ்வர்யாவை காட்டிலும் அனிருத் 10 வயது சிறியவர்.இவருக்கு அனிருத் மாமா மகனாவர். இதனிடையே ஐஸ்வர்யாவை அக்கா என்றே அழைத்து வந்தார் அனிருத்.
ஐஸ்வர்யாவுக்கும்,அனிருத்துக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்கனவே தனுஷுக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியானது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அனிருத்தை விட்டு தனுஷ் விலகியதாகவும் கூறப்படுகிறது.