ரஜினியின் மகள் வீட்டில் நகை கொள்ளை - பெண் பணியாளரை தட்டித்தூக்கிய போலீஸ்

Aishwarya Rajinikanth Crime
By Sumathi Mar 21, 2023 06:13 AM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை கொள்ளை வழக்கில் வேலைக்கார பெண் சிக்கியுள்ளார்.

நகை கொள்ளை

சென்னை, போயஸ் கார்டன், ராகவீரா அவென்யூவில் தந்தை ரஜினிகாந்துடன் வசித்து வருகிறார்ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி தன் சொந்த 'லாக்கரில்' வைத்திருந்த ஆரம், நெக்லஸ், கம்மல், வளையல் என, 60 சவரன் நகை மற்றும் நவரத்தினம், வைரம் ஆகியவை திருடு போனதாக புகாரளித்தார்.

ரஜினியின் மகள் வீட்டில் நகை கொள்ளை - பெண் பணியாளரை தட்டித்தூக்கிய போலீஸ் | Aishwarya Rajinikanths Jewelery Stolen Home

தொடர்ந்து, வீட்டில் வேலை பார்க்கும் ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுனர் வெங்கட் ஆகிய மூன்று பேருக்கும், லாக்கர் சாவி இருக்கும் இடம் தெரியும். லாக்கரை உடைக்கவில்லை. ஆனால், நகை திருடு போனது. எனவே சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தீவிர விசாரணை

அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், பணிப்பெண்ணான ஈஸ்வரி என்பவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், அவரிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

ரஜினியின் மகள் வீட்டில் நகை கொள்ளை - பெண் பணியாளரை தட்டித்தூக்கிய போலீஸ் | Aishwarya Rajinikanths Jewelery Stolen Home

இந்த நகைகள் கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக திருடப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.