காதலர் தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் ? - எதற்காக தெரியுமா?

aishwarya rajinikanth dhanush actor
By Swetha Subash Jan 22, 2022 07:56 AM GMT
Report

பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காதல் பாடல் ஒன்றை படமாக்க ஐஷ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களாக விவாகரத்து பரபரப்பில் சிக்கிக் கொண்டிருந்த ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மீண்டும் பணி தொடர்பான செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஷ்வர்யா வளர்ந்துவரும் இயக்குநராவார். நடிகர் தனுஷை வைத்து ‘3’ திரைப்படத்தையும், நடிகர் கார்த்திக்கின் மகனை வைத்து ‘வை ராஜா வை’திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

மேலும், நடனம், பாடல் என திரைத்துறையில் பல்வேறு முகங்களாக இருக்கும் இவர் தற்போது உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காதல் பாடல் ஒன்றை படமாக்க ஐஷ்வர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் ததும்பும் அழகான ஒரு பாடலை ஹைதராபாத்தில் படமாக்க உள்ளாராம் இவர். வரும் 25-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை படப்பிடிப்பு இருக்கும் என்றும்,

பின்னர் எடிட்டிங் வேலைகள் முடிந்து சரியாக பிப்ரவரி 14-ம் தேதி பாடல் வெளியாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து இப்பாடல் ஷூட்டிங் இருக்குமென தெரிகிறது.

சமீபத்தில் விவகாரத்து அறிவிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய வேலையில் தீவிரமாக களமிறங்க ஐஷ்வர்யா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முன்னெடுப்பே இந்த பாடல் ஷூட்டிங் எனவும் கூறுகிறது கோலிவுட்.

கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஷ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2013-இல் JFW-க்கு ஐஷ்வர்யா அளித்த பேட்டியில், ஐஸ்வர்யா தங்கள் உறவைப் பற்றி மனம் திறந்தார்.

தனுஷும் தானும் ஒன்று சேர்வது ‘கடவுளின் விருப்பம்’ என்றார். இந்நிலையில் நடிகர் தனுஷும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஷ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டு விவாகரத்தை சமீபத்தில் அறிவித்தனர்.