அவுங்க வீட்ல மாடு மாதிரி உழைசேன் .. அதான் திருடினேன் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் பணிப்பெண் பகீர் வாக்குமூலம்

Rajinikanth Aishwarya Rajinikanth
By Irumporai Mar 27, 2023 06:25 PM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாடாக உழைத்தும் உரிய சம்பளம் கொடுக்காத காரணத்தால் தான் திருடியதாக பணிப்பெண் ஈஸ்வரி பகீர்தகவலை கிளப்பியுள்ளார்.

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போனது பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் பணிபெண்ணாக வேலை பார்த்த பணி பெண் ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்தனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அவுங்க வீட்ல மாடு மாதிரி உழைசேன் .. அதான் திருடினேன் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் பணிப்பெண் பகீர் வாக்குமூலம் | Aishwarya Rajinikanth Eshwari Confession

  மாடுமாதிரி உழைச்சேன்

கடந்த 4 ஆண்டுகளாக கார் ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து சிறுக சிறுக லாக்கரில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. திருடிய நகைகளை சென்னை மயிலாப்பூரில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததும், அந்தப் பணத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியதும் விசாரணையில் அம்பலமானது.

அவுங்க வீட்ல மாடு மாதிரி உழைசேன் .. அதான் திருடினேன் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் பணிப்பெண் பகீர் வாக்குமூலம் | Aishwarya Rajinikanth Eshwari Confession

  மேலும், ஈஸ்வரி தனது கணவரிடம் தான் ரஜினியின் பினாமி என கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது, இந்த நிலையில் தான் ஏன் திருட்டு வேலையில் ஈடுபட்டேன் என்பது குறித்து பணிப்பெண் ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலத்தை வெளியிட்டார் அதில் தனக்கு 30 ஆயிரம் தான் சம்பளம் கொடுப்பதாகாவும் . அந்த பணம் தனனது குடுமபத்திற்கு போதவில்லை எனவே சின்ன திருட்டு வேலைகளை செய்து வந்ததாகவும், அதை அவர்கள் கவனிக்காததால் பெரிய திருட்டில் இறங்கியதாவும் கூறியுள்ளார் ஈஸ்வரி. இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.