தனுஷ் திருந்தவே இல்லை என புலம்பல்; உச்சக்கட்ட கோபத்தில் ஐஸ்வர்யா - மீண்டும் வெடிக்கும் பூகம்பம், என்ன காரணம்?

divorce issue dhanush new issue aishwarya rajinikath
By Swetha Subash Feb 06, 2022 09:01 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ்.

இவர் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து, பின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த பிரபல ஜோடி கடந்த ஜனவரி 17-ந் தேதி தங்களது சமூக வலைதள பக்கத்தில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தது.

இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களது விவாகரத்துக்கு என்ன காரணம் என இதுவரை அறியப்படாத நிலையில் பல்வேறு கருத்துக்களும் காரணங்களும் இணையத்தில் பரவ தொடங்கியது.

மேலும் குழந்தைகளின் நலன் கருதி இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இரு வீட்டாரும் இறங்கியுள்ளனர் என்ற செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருக்கிறது.

குழந்தைகளின் எதிர்காலத்தை சிறிதும் யோசித்து பார்க்காமல் ஐஸ்வர்யா எடுத்த இந்த முடிவால் நடிகர் ரஜினிகாந்த்தும் பயங்கர அப்செட்டாக இருப்பதாகவும்,

இதற்காகவே தாய் லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.

எனினும் தனுஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க தனுஷுடன் ஆரம்ப காலக்கட்டங்களில் நடித்த நடிகை ஒருவர் படவாய்ப்புக்காக அவரிடம் உதவி கேட்டு வருவதாகவும் இதனால் நடிகர் தனுஷும் அவருக்காக சிபாரிசு செய்துகொண்டிருப்பதாகவும்,

இந்த விஷயம் ஐஸ்வர்யாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை என்பதால் அவர் தனுஷ் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மன வேதனையில் இருக்கும் ஐஸ்வர்யா தனது நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் தனுஷ் இன்னும் திருந்தவே இல்லை என புலம்பி வருவதாக கூறப்படுகிறது.  

You May Like This