கெட்ட வார்த்தையிலேயே வச்சு செஞ்சுட்டேன் - அதிர்ச்சி அனுபவம் ஷேர் பண்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!
வடசென்னை படத்தில் ஹீரோயினாக தேர்வானது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி பதித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில் தனது நடிப்பில் ரசிகர்களை அள்ளினார்.
பின் கனா திரைப்படம் மூலம் இருப்பை இன்னும் உறுதியாக்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவான வடசென்னை படத்தில் ஹீரோயினாக அசத்தியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆடிஷன் அனுபவம்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்த படத்தில் எப்படி தேர்வானேன் என்பது குறித்து பேசியுள்ளார். அதில், ”வட சென்னை படத்துல முதல்ல சமந்தா , அமலா பால்தான் இயக்குநர் வெற்றிமாறன் லிஸ்ட்ல வச்சுருந்தாரு. நான் ஆடிஷன் போனப்போ எனக்கு ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி மாற்றி ஃபோட்டோ எடுத்தாரு.
அதன் பிறகு என்னை கூப்பிட்டு ,இதுதான் கடைசி ஆடிஷன் ஐஸ்வர்யா. நீங்க உங்களுக்கு என்ன மாதிரியான கெட்ட வார்த்தை தெரியுமோ , படு மோசமான வார்த்தைகள் எதுவோ அதையெல்லாம் சொல்லி திட்டுங்கன்னு சொன்னாரு.
வச்சு செஞ்சுட்டேன்
எனக்கு ஒரே தயக்கமா போச்சு , உடனே பக்கத்தில் இருந்த கேமரா மேன் செந்தில் , பண்ணுங்கன்னு சொல்லி சைகை காட்டுறாரு. அதன் பிறகு திரும்பி கெட்ட வார்த்தையாலேயே வச்சு செஞ்சுட்டேன். உடனே வெற்றி சார் அந்த இடத்தை விட்டு போயிட்டாரு.
நான் பின்னாலேயே போயிட்டு என்ன சார் ஆச்சு , ஓக்கேயா என கேட்டேன். உடனே வெற்றி சார் என்ன பத்மா எப்போ ஷூட்டிங் போகலாம் அப்படினு கேட்டாரு. நீதான் படத்துல ஹீரோயின்னு சொல்லிட்டாரு. இந்த உலகத்துலேயே கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நானாகத்தான் இருப்பேன்.
செம ரெஸ்பான்ஸ்
தனுஷ் மாதிரியான பெரிய ஹீரோவை கெட்ட வார்த்தையில திட்டும் பொழுது நான் பயந்தேன். படம் 5 மணி ஷோ ரிலீஸ் ஆகுது , என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் call பண்ணுறாங்க. தியேட்டர்ல நான் கெட்ட வார்த்தை பேசி நடிச்ச சீனுக்கு செம ரெஸ்பான்ஸுனு சொன்னதும் எனக்கு நிம்மதியாச்சு .” என அனுபவம் பகிர்ந்துள்ளார்.