பொது இடத்தில் உங்க மகளை இப்படியா நடத்துவீங்க...? - ஐஸ்வர்யா ராயை வெச்சு விளாசிய ரசிகர்கள்
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.
உலகெங்கிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக இதில் ஏ.ஆர்.ரகுமானின் ‘லே மஸ்க்’ படம், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலர், மாதவன் இயக்கி உள்ள ‘ராக்கெட்ரி’ படம், பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவ்விழாவில் வெளியிடப்பட உள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இணையத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பட்சன் மற்றும் ஆராத்யாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்தில் புறப்பட்ட குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய் கிளம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஐஸ்வர்யா தன்னுடைய 11 வயதாகும் மகள் ஆராத்யாவின் கையை விடாமல் இறுக்கிப்பிடித்துக் கொண்டே இருக்கிறார். ஆராத்யா சுதந்திரமாக இருக்க முயல்கிறார். ஆனால், ஐஸ்வர்யோ ஆராத்யாவை விடுவதாக தெரியவில்லை.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்... ஏன் இப்படி பண்றீங்க... ஆராத்யாவிற்கு இப்போது 11 வயதாகிறது. இன்னும் அவரை ஏன் இப்படி இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவருடைய ஹேர் ஸ்டைல் கூட மாற்றாமல் இப்பவும் குழந்தைப்போலவே அவரை நடத்தி வருகிறார்கள் என்று சராமரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.