நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா இணைவதற்கு வாய்ப்பே இல்லை - வெளியான புதிய தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும்,தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவருமான நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். அவர்களின் அறிவிப்பு ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இந்நிலையில் பிரிவை அடுத்து இருவரும் அவர் அவர் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா தனது ஆல்பம் பாடலான முசாபிர் பாடல் தயாரிப்பில் ஈடுபட்டு தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன. தனது மகளையும்,நடிகர் தனுஷையும் சேர்த்து வைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே தனுஷ்,மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இறங்கி வந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர்கள் முடியாது என கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி தனுஷும்,ஐஸ்வர்யாவும் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர்.அவர்களது நெருங்கிய வட்டாரத்தினர். மேலும் அவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிய வேண்டியவர்கள் தற்போது தான் பிரிந்திருக்கிறார்கள்.
அவர்களது 2 குழந்தைகளுக்காக 6 ஆண்டுகள் பல்லை கடித்துக் கொண்டு வாழந்து வந்ததாகவும்,குழந்தைகள் வளர்ந்த உடன் பிரிந்து விடலாம் என காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இனி ஐஸ்வர்யாவும்,தனுஷும் சேர்ந்து வாழ்வது கடினம் என்றும்,இனி அவர்கள் சேர்வதற்கு
வாய்ப்பே இல்லை என்கின்றனர் அவர்களது நெருங்கிய வட்டாரத்தினர்.

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் கோளாறு : 360 பயணிகளுடன் நடுவானில் வானில் வட்டமடித்த விமானம் IBC Tamil
