ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பின் பையன்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர் தனுஷ்..!
கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ்,மற்றும் ஐஸ்வர்யா தங்களது வாழ்க்கையில் இருந்து பிரிவதாக சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மத்தியிலும்,இருவரின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க அவர்களது நண்பர்களும்,குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சியை சற்றும் கண்டுகொள்ளாத நடிகர் தனுஷ்,மற்றும் ஐஸ்வர்யா தங்களது வேலைகளில் பிசியாக மாறினர்.
இந்நிலையில் பார்டி ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்த இருவரும் பேசிக்கொள்ளாமல் பிரிந்து சென்றதாக தகவல் வெளியானது.
இதனிடையே நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்ததற்கு பின் தனது பையன்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் “ஒரு நீண்ட சந்திப்பு!! மீண்டும் என் பையன்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது 1 மில்லியன் லைக்குகளைக் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
