மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜனிகாந்த் - மனம் இறங்காத தனுஷ்

DhanushAishwarya AishwaryaRajinikanth AishwaryaR.Dhanush AishwaryaAdmitHospital AishwaryaMusafirSong
By Thahir Mar 07, 2022 11:44 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தீடிரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா நடிகர் தனுஷுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜனிகாந்த் - மனம் இறங்காத தனுஷ் | Aishwarya R Dhanush Admit Hospital

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக சமூகவலைதளங்களில் கூட்டாக அறிவித்திருந்தனர்.இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

இதனிடையே இருவரையும் மீண்டும் சேர்த்த வைக்க அவர்களது குடும்பத்தினரும்,நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர். தங்களது விவாகரத்து சம்பவத்தை பற்றி கவலைபடாமல் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களுடைய வேலைகளில் பிசியாக இருந்து வந்தனர்.

ஐஸ்வர்யா தனது தயாரிப்பில் முசாபிர் என்ற காதல் பாடல் ஒன்றை தயாரித்து வந்தார்.ஐதராபாத்தில் முகாமிட்டு இந்த பாடல் காட்சிகளை படமாக்கி வந்தார்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜனிகாந்த் - மனம் இறங்காத தனுஷ் | Aishwarya R Dhanush Admit Hospital

தனது முசாபிர் என்ற காதல் பாடலை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அவர் தனது பாடல் குறித்தான வேலைகளில் பிசியானார்.

தற்போது மீண்டும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனாவுக்கு முன்னும், பின்னும். மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருப்பது போன்று உணர்கிறேன். ஆனால், உங்களுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில், பன்முக தன்மை கொண்ட உங்களிடம் வந்து, உங்களுடன் நேரம் செலவிட கூடிய மருத்துவர்களை நீங்கள் சந்திக்கும்போது, இந்த காய்ச்சலெல்லாம் மோசமென தோன்றவில்லை.

என்னவொரு தொடக்கம் உங்களை சந்திப்பதில் மகளிர் தினத்திற்கான கொண்டாட்டம் தொடங்குகிறது மருத்துவர் பிரீத்திகாசாரி அவர்களே! என அதில், தெரிவித்து உள்ளார்.

அதனுடன், தனக்கு சேவை செய்யும் மருத்துவருடன் புன்சிரிப்புடன் இருக்க கூடிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார். இந்த தகவல் பற்றி அறிந்ததும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும், குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வலைதள பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கபட்டுள்ள ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் நலம் விசாரிப்பாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.