நொறுங்கிய ஐஸ்வர்யாவை இன்ப மழையில் நனைய வைத்த பிரபலம் - வைரலாகும் வீடியோ
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கி வருகிறார்.
‘முசாபிர்’ எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப்போகும் காதல் கதையாம். அனிருத்தின் இசை மனதை துளைக்க, இப்பாடல் எப்போ வெளியாகுமோ என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் பிரபுதேவா, நடிகை குஷ்பூ தொடர்ந்து நடிகை சுஹாசினி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா. அவர் ரொம்ப திறமைசாலி என்பது ஐஸ்வர்யா சிறுமியாக இருக்கும்போதே எனக்கு தெரியும். தற்போது அருமையான இசை வீடியோவை உருவாக்கியிருக்கிறார். அதன் பெயர் பயணி. அந்த இசை வீடியோ நிச்சயமாக பிரமாதமாக இருக்கும். உங்களின் மொத்த குழுவுக்கும் குட் லக் ஐஸ்வர்யா என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Thank you so much aunty ! @hasinimani pic.twitter.com/QZB2Fkt3Om
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 13, 2022