தனுஷ் குடும்பத்தினருடன் நெருங்கி பழகும் ஐஸ்வர்யா - வெளியான முக்கிய தகவல்..!
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் உடனான விவாகரத்திற்கு பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பெயர்களின் பின்னாள் உள்ள தனுஷ் பெயரை அண்மையில் நீக்கினார்.
தனுஷ் பெயர் நீக்கப்பட்டதற்கு தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஜோடியான இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.
இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.இருவரும் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர். பிரிவு அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருந்தார் ஐஸ்வர்யா.
இதனால் இருவரும் மீண்டும் சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் தனக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கி தனது தந்தை ரஜினிகாந்த் பெயரை சேர்த்து கொண்டார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது தனுஷின் அண்ணன் மனைவி செல்வராகவன் கீதாஞ்சலியுடன் இருப்பதை போன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் பெயரை நீக்கிவிட்டு அவரின் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா நெருக்கம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.