அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மையங்கள் அமைத்த ஏர் இந்தியா
நேற்றைய தினம் விமான விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஏர் இந்தியா உதவி மையங்களை அமைத்துள்ளதாகவும், அது தொடர்பான விவரங்களும் வெளியாகியுள்ளது.
விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன்- கேட்விக் விமான நிலையத்திற்கு நேற்றைய தினம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது.
புறப்பட்டு சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில், விமானத்தில் 2 விமானிகள் 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
விபத்தில் விமானத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்து 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியொரு கோர விபத்து ஏற்பட விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி தான் காரணம் என பதிவாகியுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
குறித்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
உதவி மையங்களின் விவரங்கள்
இந்த நிலையில், விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், அகமதாபாத், மும்பை, டெல்லி மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்து கொடுத்துள்ளது.
இந்த மையங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அகமதாபாத்திற்கு பயணிகளுக்கும் உதவிச் செய்யும்.
இந்தியாவிற்குள் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: 1800 5691 444; மற்றும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: +91 8062779200.
மேலும் (https://x.com/airindia) மற்றும் http://airindia.com ஆகியவற்றில் உடனடியாக தகவல்களை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.