அடுத்தடுத்து 3 விமான பயணம் ரத்து: அகமதாபாத்- லண்டன் பயணிக்க இருந்த பயணிகள் அவதி

India Air India Ahmedabad
By DHUSHI Jun 17, 2025 12:19 PM GMT
Report

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது.

விமானம் விபத்து 

கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களில் மருத்துவ மாணவர் விடுதியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

விமானத்தில் பயணித்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து 3 விமான பயணம் ரத்து: அகமதாபாத்- லண்டன் பயணிக்க இருந்த பயணிகள் அவதி | Air India Ahmedabad London Flight Cancelled

திடீர் விமானம் ரத்து ஏன்?

இந்த நிலையில் விபத்துக்குப் பின்னர், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம்(AI-159) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 இதனால் விமானத்தில் பயணிக்கவிருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அடுத்தடுத்து 3 விமான பயணம் ரத்து: அகமதாபாத்- லண்டன் பயணிக்க இருந்த பயணிகள் அவதி | Air India Ahmedabad London Flight Cancelled

அவர்களுக்கு விமானக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3-வது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW