டெல்லியில் ராஜபாதைக்கு மேலே விமான படை சாகசம் : 75 விமானங்கள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சி

india airforce delhi
By Irumporai Jan 26, 2022 07:02 AM GMT
Report

டெல்லி குடியரசு தின நிகழ்வில், ராஜபாதைக்கு மேல் விமானப்படையினர் சாகசம் புரிந்து வருகின்றன. இந்த சாகச நிகழ்வில் 75 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியேற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது, ராஜபாதைக்கு மேல் விமானப்படையினர் சாகசம் புரிந்து வருகின்றன. இந்த சாகச நிகழ்வில் 75 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.