ஐபிஎல் 2023 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்...!
ஐபிஎல் 2023 சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் இங்கிலாந்து வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -
டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடந்தது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்
இந்நிலையில், ஐபிஎல் 2023 சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக இருந்தவர் மார்க்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Aiden Markram! pic.twitter.com/hbWj0C5BTj
— RVCJ Media (@RVCJ_FB) February 23, 2023
Aiden Markram appointed as the captain of Sunrisers Hyderabad
— Johns. (@CricCrazyJohns) February 23, 2023