ஜெயலலிதாவின் வெற்றிக்கு தடையாக இருந்த நீங்களா விசுவாசி? : ஓபிஎஸ் - க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி நடைபெற்றது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள, ஓ. பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
கலவரமான ஒற்றை தலைமை விவகாரம்
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பேசுபொருளான போதே ஈபிஎஸ் கை ஓங்கியது.
ஆலவே ஓபிஎஸ் நீக்கப்பட்டு ஈபிஎஸ் கட்சியின் தலைமையை கைப்பற்றினார். அத்துடன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி :
அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்.அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. இந்த கட்சியில் இருந்து கொண்டே கட்சியை அழிக்க நினைத்த எட்டப்பர்கள் வேண்டுமானால் கட்சியிலிருந்து வெளியேறலாம், தொண்டர்கள் இங்கேயேதான் இருப்பார்கள்.
வெற்றிக்கு தடையாக இருந்த நீங்களா விசுவாசி
ஒரு மாதம் கூட ஆட்சி நிலைக்காது என கூறிய ஸ்டாலினே அதிர்ந்து போகும் அளவுக்கு நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தோம்.
மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது;திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், நீங்கள் நினைப்பதை நிச்சயமாக நிறைவேற்றுவேன் எனக் கூறிய ஈபிஎஸ்.
விட்டுக்கொடுத்தேன் விட்டுக்கொடுத்தேன் என்று சொல்கிறீர்கள், எதை விட்டு கொடுத்தீர்கள், நீங்கள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை, நாங்கள்தான் விட்டுக்கொடுத்தோம்; ஜெயலலிதாவின் வெற்றிக்கு தடையாக இருந்த நீங்களா விசுவாசி? எனக் கேள்வி எழுப்பினார்.