3வது முறையாக அதிமுக ஆட்சி அமையும்- வாக்களித்த பின் ஓபிஎஸ் சிறப்பு பேட்டி
election
edappadi
Panneerselvam
aiadmk
By Jon
தமிழகமே எதிர்பார்த்த சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் அமைந்திரக்கும் வாக்குச்சாவடியில் அனைத்து மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் தனது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் பெரியகுளம் செவன்த் டே பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்து விட்டு வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக மீண்டும் வெற்றி பெறும். 3வது முறையாக அதிமுக ஆட்சிதான் அமையும் என்று உறுதிபட கூறினார்.