அதிமுகவை நீங்க தூசி அளவு பேசுனா நாங்க தூணளவு பதில் கொடுப்போம் : செல்லூர் ராஜு விமர்சனம்
அதிமுகவை தூசி அளவுக்கு விமர்சித்தால், தூணளவுக்கு பதிலடி கொடுப்போம் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்: மதுரை மாநகராட்சி ஆணையர் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி என்றும், அதிமுக காக்க கூட்டம் அல்ல; கொள்கை கூட்டம் எனவும், அதிமுக தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது என்றும் கூறினார்.
அதே போல் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், அதிமுக தனித்து நிற்கத் தயாராக உள்ளது என்றும், என்னுடைய கருத்தை இபிஎஸ், ஓபிஎஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.
மேலும், அண்ணாமலை தமிழகத்தில் அரசியல் செய்கிறார் என்று கூறிய செல்லூர் ராஜு, முருகன் வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி; தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது.
ஆகையால் பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா ?? என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவை தூசி அளவுக்கு விமர்சித்தால், தூணளவுக்கு பதிலடி கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.