அதிமுக அலுவலக கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

O Paneer Selvam Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Aug 25, 2022 10:17 AM GMT
Report

அதிமுக அலுவலக கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிமுக கலவரம்

அதிமுக தலைமை அலுவகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்பின் அதிமுக அலுவலக கலவர வழக்கு விசாரணையை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார்.  

அதிமுக அலுவலக கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் | Aiadmk Office Riot Case Shift To Cbcid

சிபி சிஐடிக்கு மாற்றம்

 இதுதொடர்பாக புகார் அளித்தும் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றசாட்டியுள்ளார். எனவே, ஓபிஎஸ்-க்கு எதிரான புகாரை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி சிவி சண்முகம் வழக்கு தொடுத்திருந்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி (பொதுக்குழுவின் போது) ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.