ஆகஸ்ட் 4ல் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை
அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரிக்க உள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதுபோன்று உட்கட்சி தேர்தலுக்கு எதிரான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி வழக்குகள் ஆகஸ்ட் 16-ல் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil