அதிமுக - பாஜக வலிமையான கூட்டணி அமைத்துள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக- பாஜக வலிமையான கூட்டணியை அமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை பாண்டிக்கோவில் அருகே நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகமே வியக்கும் வகையில் ஒரே ஆண்டில் தடுப்பூசியை வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சேரும் என்றார்.
மத்திய அரசு மக்களுக்கான அரசாக செயல்படுகிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், தேவையான நிதியையும் தருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கி, மின்மிகை மாநிலமாகவும் தமிழகம் திகழ்வதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கான அரசுகள் செயல்படுவதால் மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்கின்றன என தெரிவித்திருந்தார். முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒரே ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தவர் மோடி எனக் குறிப்பிட்டார்.
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil