விமான விபத்து: வைரலாகும் பணிப்பெண்களின் ரீல்ஸ் வீடியோ

Viral Video Air India Ahmedabad
By DHUSHI Jun 13, 2025 08:53 AM GMT
Report

அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு முன்னர் அங்கு வேலைச் செய்யும் விமான பணிப்பெண்கள் கடைசியாக செய்த ரீல்ஸ் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விமான விபத்து

அகமதாபாத்தில் ஜூன் 12ஆம் தேதி நன்பகள் 1.39 மணியளவில், டேக்-ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அந்த விபத்தில் பயணிகளுடன் சேர்த்து விமான ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் உயிரிழக்கும் முன்னர் செய்த ரீல்ஸ் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விமான விபத்து: வைரலாகும் பணிப்பெண்களின் ரீல்ஸ் வீடியோ | Ahmedabad Flight Crash Air Hostess Reels Video

பணியாளர்கள் 10 பேர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான இந்த விமானத்தை, கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் க்ளைவ் குந்தர் ஆகியோர் இயக்கியிருக்கின்றனர். இவர்கள் இருவருமே, நன்கு அனுபவம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

விமான பணிப்பெண்களாக ரோஷினி, காத்ஹ்தோய் ஷர்மா, மிதாலி உள்ளிட்டோர் இருந்திருக்கின்றனர். இதில், ரோஷினி ராஜேந்திர சோங்காரே விமான பணிண்பெண்ணாக மட்டுமன்றி, இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

விமான விபத்து: வைரலாகும் பணிப்பெண்களின் ரீல்ஸ் வீடியோ | Ahmedabad Flight Crash Air Hostess Reels Video

விமானத்தில் எங்கெல்லாம் பயணித்திருக்கிறாரோ, அவை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது அவரது வழக்கம். தற்போது உயிரிழந்திருக்கும் ரோஷினி, தனது சக விமான பணிப்பெண்களுடன் ரீல்ஸ் எடுத்து சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருக்கிறார்.

அதில், அவர்கள் மகிழ்ச்சியாக சிரிப்பதும் கேமராவை பார்த்து போஸ் கொடுப்பது பார்த்தவர்களை சோகமடையச் செய்துள்ளது. இப்படி ஒரே நிமிடத்தில் உயிரிழந்ததை நினைத்து வேதனைப்படுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரீல்ஸ் செய்த பெண்

மணிப்பூரில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த Nganthoi Sharma, விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இளம் விமான பணிப்பெண்களுள் ஒருவராக பணியாற்றி வந்துள்ளார்.

விமான விபத்து: வைரலாகும் பணிப்பெண்களின் ரீல்ஸ் வீடியோ | Ahmedabad Flight Crash Air Hostess Reels Video

21 வயதாகும் இவர், 19 வயதாக இருக்கும் போதே விமான பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது சகோதரிக்கு போன் செய்து தனது விமானம் லண்டனுக்கு செல்ல இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதனால், சில நாட்களுக்கு தன்னால் போன் செய்ய முடியாது என்றும், ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் போன் செய்வதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இதுதான் அவரது கடைசி போனாக இருக்கும் என்பது தங்களுக்கு தெரியாது என குடும்பத்தினர் கண்ணீருடன் கூறியுள்ளனர்.