7-வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்...100 நாட்களை கடந்த சிறைவாசம்..!!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2015-ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிக்கப்பட்டது.
மறுக்கப்பட்ட பிணை
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், இது அரசியல் காழ்புணர்ச்சியால் நடத்தப்பட்ட கைது என்றும், அமலாக்கத்துறை விசாரணையின் போது, செந்தில் பாலாஜியை பாஜகவில் சேரும் படி அழுத்தம் கொடுத்ததாகவும் அதிரடி கருத்துக்களை முன்வைத்தார். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, இலாகா இல்லாத அமைச்சர் செந்திள் பாலாஜிக்கு பிணையை மறுத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எதன் அடிப்படையில் அவரின் பிணை மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீடிக்கப்பட்ட காவல் இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில, அவருக்கு மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் 14 நாட்கள் அதாவது வரும் அக்டோபர் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.