50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமியை நெருங்கும் வால்நட்சத்திரம் : எப்போது பார்க்கலாம்?
50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர்.வால்நட்சத்திரங்கள் தான் பூமிக்கு தண்ணீர் கொண்டுவந்ததாகவும் அதிலிருந்து தான் உயிர்கள் தோன்றியதாகவும் சிலர் நம்புகின்றனர்.
பூமிக்கு வரும் வால்நட்சத்திரம்
இது போல வால்நட்சத்திரங்கள் பற்றி கதைகள் இருக்கின்றன. அவற்றில் உண்மையானவற்றை கண்டறிய ஆய்வுகள் முக்கியம். இதனால் தான் பூமிக்கு அருகில் வால்நட்சத்திரங்கள் வந்ததாக ஆராய்ச்சிட்யாளர்கள் நம்புகின்றனர்.
This stunning 'true colour' image of the comet C/2022 E3 (ZTF) was taken from the HCT from our Indian Astronomical Observatory in #Hanle Ladakh. The telescope was tracking the fast moving comet, and so the background stars appear to move in a trail. @asipoec (1/n) https://t.co/pOB7hcOFKs
— IIAstrophysics (@IIABengaluru) January 10, 2023
வெறும் கண்களால் பார்க்கலாம்
இந்த நிலையில் பூமியிலிருந்து செவ்வாய் நோக்கி பயணிக்கும் இந்த வால்நட்சத்திரம் வரும் பிப்ரவரி 2ம் தேதி பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2ம் தேதி பூமியின் வடக்கு அரைகோளத்தில் இருட்டான பகுதியில் இருந்து வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். பிப்ரவரி 10ம் தேதி வரை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம் என்றும் ஆராய்ச்சியளர்கள் கூறியுள்ளனர்.