தாலிபான்கள்னா யாருனு தெரியுமா? - பெண்கள் விளையாட்டுக்கு தடை
பெண்களை விளையாட அனுமதிக்க முடியாது என தாலிபான்கள் கூறியுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில் அங்கு பழமைவாதம் தலை தூக்கும் என உலக நாடுகள் மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களும் அச்சம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் 20 வருடங்களுக்கு முன் இருந்த கடுமையான சட்டங்கள் எதுவும் இருக்காது என தாலிபான்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்நிலையில், தங்கள் கூறியதற்கு நேரேதிராக பெண்களுக்கு எதிரான கட்டுபாடுகளை விதித்தது. அவர்கள் படிக்க அனுமதி உண்டு ஆனால் ஆண்களுடன் படிக்க அனுமதி இல்லை என கூறி கல்விநிலையங்களில் திரை சீலை வைத்து மறைத்துள்ளனர்.
இப்படி இருக்கையில், தற்போது விளையாட்டுதுறையில் பெண்களுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளது. அதற்கு அவர்கள் கூறிய காரணம் தான் நம்மை ஆச்சரியபடவைக்கிறது.
அதாவது, விளையாட்டில் ஈடுப்பட்டால் பெண்கள் முகத்தை மறைக்க முடியாது அதுமட்டுமின்றி அவர்களை போட்டோ வீடியோ எடுப்பர் இதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
தாங்கள் பழவாத கருத்துகளால் பெண்களை அடிமைபடுத்தமாட்டோம் என கூறிய தாலிபான்களின் தற்போதைய செயல் எதை பறைசாற்றுகின்றது என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.