பாழைய மாதிரி தான் இருப்போம் - கை, கால்களை துண்டிக்கும் தண்டனை தொடரும்.. தலிபான்கள் திட்டவட்டம்

Afghanistan Taliban
By Thahir Sep 25, 2021 04:10 AM GMT
Report

கை, கால்களைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் ஆப்கானிஸ்தானில் தொடரும் என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர்.

அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதும் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி இறுதியாக காபூலை தன்வசப்படுத்தினர்.

பாழைய மாதிரி தான் இருப்போம் - கை, கால்களை துண்டிக்கும் தண்டனை தொடரும்.. தலிபான்கள் திட்டவட்டம் | Afghanistan Taliban People

இதனால் ஆப்கானிஸ்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக கூறிய தலிபான் அமைப்பு தற்காலிக அரசையும் அமைத்துள்ளனர்.

தலிபான் அரசு அமைந்த பிறகு அங்கு பெண்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. தலிபான்கள் பழமைவாதிகள் என்பதால் பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை விரும்பமாட்டார்கள்.

இதனால் அவர்களுக்கு படிக்கவும், விளையாடவும், வேலை செய்யவும் அனுமதியில்லை. மாறாக நடந்தால் தண்டனை கடுமையாக வழங்கப்படும்.

இந்த நிலையில், தலிபான் அமைப்பை நிறுவியர்களில் ஒருவரான முல்லா நூருதீன் துராபி இது குறித்து கூறுகையில், கை, கால்களைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்.

நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே.

என்ன மாதிரியான தண்டனைகள் எல்லாம் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனைகள் வழங்குகிறோம்.

கைகளைத் துண்டிப்பது பற்றி பல்வேறு விமர்சனங்களும் நிலவுகின்றன. ஆனால், கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்.

ஆப்கன் மக்கள் மத்தியில் ஊழல் மலிந்துள்ளது. பணத்தை அபகரிப்பது போன்ற பழக்கமும் உருவாகி உள்ளது. எங்கள் தண்டனை முறை அமைதியையும், நிலையான தன்மையையும் கொண்டு வரும்.

நாங்கள் எங்கள் சட்டத்திட்டங்களை அமல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

தலிபான்கள் தங்களின் முந்தைய ஆட்சியின் போது குற்றவாளிகளுக்கு காபூல் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் தான் தண்டனைகளை நிறைவேற்றுவார்கள்.

கொலைக் குற்றவாளிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்கள். பொதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களே இந்தத் தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியிடமிருந்து பிளட் மனி என்றழைக்கப்படும் குற்றத்துக்கு இழப்பீடாக பெருந்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டால் கையை வெட்டுவார்கள். நெடுஞ்சாலையில் திருட்டில் ஈடுபட்டால் கால் துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.