மக்களவை தேர்தல்: 'அவர் ஜெயிக்கணும்' - குடும்பத்துடன் அக்னி சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு!

By Jiyath Apr 10, 2024 09:00 AM GMT
Report

மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு அக்னி சட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். 

கஞ்சா கருப்பு

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல்:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு,

தனது குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கஞ்சா கக்கிருப்பு "எடப்பாடி பழனிச்சாமி ஐயாவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம்.

தேர்தல் பிரச்சாரம் - பறக்கும் முத்தங்களை அள்ளி வீசிய முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா!

தேர்தல் பிரச்சாரம் - பறக்கும் முத்தங்களை அள்ளி வீசிய முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா!

ஜெயித்துதான் பழக்கம்

நடைபெற இருக்கின்ற எம்.பி. தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி குடும்பத்துடன் அக்னிச்சட்டி பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன்.

மக்களவை தேர்தல்:

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் வெற்றி பெற வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டால் தானே நடக்கும். எதிர்க்கட்சிகள் பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிப்பது , காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஐயா தலைமையிலான அதிமுகவினர் என்றைக்கும் ஒற்றைப் பரம்பரைதான். தனித்து நின்று ஜெயித்துதான் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி எடப்பாடிதான்" என்று தெரிவித்துள்ளார்.