தினகரன் வசம் அதிமுக; தேர்தலுக்கு பிறகு இது நடக்கும் - என்ன சொல்கிறார் அண்ணாமலை?
தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக சார்பில் தேனி மக்களவை தொகுதியில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரனே போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் "ஒப்பந்ததாரர்களுக்காக நடத்தப்படும் கட்சி என்னவென்றால் அது அதிமுக தான். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
தினகரன் வசமாகும்
அதிமுகவை ஒப்பந்தரார்களுக்கு தாரை வார்த்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களை பார்த்தாலே இது தெரியும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர்.
தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும். டிடிவி தினகரன் கையில் அதிமுக சென்றிருந்தால் ஸ்டாலின் முதலமைச்சராகியிருக்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.