உங்களுக்கு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? விஜய்யை விமர்சித்த அதிமுக

Vijay ADMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Feb 13, 2026 01:56 PM GMT
Report

உங்களுக்கு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே என விஜய்யை அதிமுக விமர்சித்துள்ளது.

சேலத்தில் விஜய் பேச்சு

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

உங்களுக்கு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? விஜய்யை விமர்சித்த அதிமுக | Admk Slams Tvk Vijay 30 Years Corruption Exp

இதில் பேசிய அவர், அடுத்தவங்க ஆரம்பிச்ச அரசியல் கட்சியில் அரசியல்வாதியாக உள்ள உங்களுக்கு ஒரு சவால். என்னை போல் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் வாக்கு வாங்கி காட்ட முடியுமா? அதுக்கு உங்களுக்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா?

75 வருட கட்சி, 50 வருட கட்சிகளை விட, 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் களத்தில் முதன்மை கட்சியாக தவெக வளர்ந்துள்ளது" என பேசினார்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது.

30வருட கொள்ளை அனுபவம்

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?அப்பாவால சினிமா உள்ள வந்தீங்க...

வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu....

அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?  

உங்களுக்கு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? விஜய்யை விமர்சித்த அதிமுக | Admk Slams Tvk Vijay 30 Years Corruption Exp

"தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control" என்பதை புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், மாண்புமிகு புரட்சித் தமிழர் ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்..

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்?

எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்!

எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்! நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள் தான்! நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத் தான்! 

"அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடு தான் மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.

அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!" என தெரிவித்துள்ளனர்.