கொலை, கொள்ளை, கற்பழிப்பு.. கோமா நிலையில் காவல்துறை - விளாசிய ஆர்.பி. உதயகுமார்!

Tamil nadu ADMK Madurai
By Jiyath May 05, 2024 12:10 PM GMT
Report

திமுக அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு.. கோமா நிலையில் காவல்துறை - விளாசிய ஆர்.பி. உதயகுமார்! | Admk Rb Udhayakumar Indictment Tn Govt

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

அரண்மனையில் வாழும் ராஜாதிராஜா..! இதெல்லாம் எப்படி புரியும்? பிரியங்கா காந்தி பதிலடி!

அரண்மனையில் வாழும் ராஜாதிராஜா..! இதெல்லாம் எப்படி புரியும்? பிரியங்கா காந்தி பதிலடி!

குற்றச்சாட்டு 

புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு.. கோமா நிலையில் காவல்துறை - விளாசிய ஆர்.பி. உதயகுமார்! | Admk Rb Udhayakumar Indictment Tn Govt

தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.