நான், தினகரன், சசிகலா இணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்!

Tamil nadu ADMK Passport
By Jiyath Jan 31, 2024 02:36 AM GMT
Report

தேர்தல் நெருங்கி வரும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

தஞ்சையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. 

நான், தினகரன், சசிகலா இணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்! | Admk O Panneerselvam Speech At Tanjore Event

இந்த கூட்டத்தில் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி என். நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் "எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலராகப் பொறுப்பேற்ற பிறகு ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வெல்ல முடியாது 

இந்த தோல்விக்குக் காரணமான எடப்பாடி பழனிசாமிதான் இக்கட்சியின் அழிவுக்கும் காரணமாக இருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும்போது யாருடன் கூட்டணி என்பது முறையாக அறிவிக்கப்படும்.

நான், தினகரன், சசிகலா இணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்! | Admk O Panneerselvam Speech At Tanjore Event

இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டபோது, அது ஆண்டிகள் கூடிக் கலையும் மடமாகத்தான் இருக்கும் எனக் கூறினேன். அது இப்போது நிகழ்ந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா உள்பட அதிமுகவில் உள்ள அனைவரும் இணைந்து தேர்தல் களத்தில் நின்றால், இக்கழகத்தை வெல்வதற்குத் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. இக்கட்சி ஒன்றிணைவதற்கு முடியாது எனக் கூறும் ஒரே நபர் எடப்பாடி பழனிசாமிதான்” என்றார்.