தொண்டர்களின் முடிவே உறுதி - இபிஎஸ்..? ஒரு மாதம் தள்ளிப்போடும் பாஜக..?
தொடர்ந்து கூட்டணிக்கு பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், விலகி சென்று கொண்டே இருக்கின்றது.
அதிமுக. அதிமுக - பாஜக கூட்டணி முறிவும், அதன் விளைவு குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. உடும்பு பிடியாக இருக்கும் அதிமுக கூட்டணி இனி எப்போதும் இல்லை என கூறியது. சில தினங்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை என கூற, சில தினங்களாக முதல் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தொண்டர்களின் முடிவை ஏற்று கூட்டணி முறிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதும் அதனையே கூறினார். கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் உணர்வை மதித்து எடுத்ததாக கூறிய அவர், இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக கூறினார். அண்ணாமலையை மாற்றும் படி தாங்கள் தெரிவிக்கவில்லை என எடப்பாடி சுட்டிக்காட்டி சென்ற நிலையில், கூட்டணி குறித்து இன்னும் ஒரு மாதத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக பாஜக வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
நேற்று பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பாஜக அதிமுக கூட்டணி தொடரவேண்டும் எனக் கூறி அது குறித்து பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறினார். ஆனால், தொடர்ந்து அதிமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வரும் நிலையில், இந்த சூழலில் எவ்வாறு முடியும் என்பதில் பதிலளிக்க முடியாது. ஒரு வேலை மனம் உகந்து அதிமுக மீண்டும் கூட்டணிக்கு செல்லுமா? அவ்வாறு சென்றால் இன்று தொண்டர்களை முன்னிறுத்திய எடப்பாடி அப்போது என்ன பதிலளிப்பார் என்ற கேள்விகளாக இருப்பதை விட விமர்சனமாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தற்போதைய சூழலில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போவதே சரியான முடிவாகும். சரமாரியான விமர்சனத்தையும், கருத்துக்களையும் கூறி விட்டு அதிமுக தேர்தலின் போது நிலைப்பாட்டில் இருந்து மாறினால் அது வாக்குகளில் எதிரொலிக்க கூடும்.
அதனை யோசித்து விட்டு தான் தற்போதிலிருந்தே அதிமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவை தீர்க்கமாக எடுத்துவிட்டு விலகி நிற்கிறது என்றால், பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதை நோக்கி இருக்கும் என்பது சில மாதங்களில் தெரிந்து விடும்.