தர்மம் நீதி வென்றுள்ளது : ஈபிஎஸ் வெற்றி அறிக்கை

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Sep 02, 2022 09:57 AM GMT
Report

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .

பொதுக்குழு தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

தர்மம் நீதி வென்றுள்ளது : ஈபிஎஸ் வெற்றி அறிக்கை | Admk High Court Judgment Edapadi Palisamy

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை ஐகோர்ட் தீரப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்ற இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், நீதி மன்ற தீர்ப்பு அளித்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் :

உண்மை உறங்கும் நேரம் பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலா வரும் என்று சொல்வார்கள் நம்மையெல்லாம் ஆளாகிய கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

அறப்போரில் முழு மனதோடு ஈடுபட்டு வருகிறோம்

நம்மையெல்லாம் வாழவைத்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும் தீய சக்தி திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களை காக்கும் அறப்போரில் முழு மனதோடு ஈடுபட்டு வருகிறோம்.

இதற்கு தடையாக உடன் இருந்தே கொள்ளும் வியாதிகளாக நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒரு சில சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர் .

இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் நீதி நேர்மை நாணயத்தை நம்பி கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம் இன்றைய தினம் தர்மம் நீதி வென்றுள்ளது .

23.6.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும் கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழக பொதுக்கூட்டம் செல்லும் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிவிப்புகளும் முடிவுகளும் செல்லும் என்றும்

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இன்று வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் .

இதற்கு துணையாக இருந்த ஒவ்வொரு தொண்டர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.