அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு
11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 1-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுக்குழுவுக்கு தடை
இந்த நிலையில் வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.
தலையிட முடியாது
அதிமுகவின் கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . அதிமுக பொதுக்குழுவில் நடத்த நீதிமன்றம் வழி காட்ட முடியாது. அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உட்கட்சி பூசலை ஏற்படுத்தும் விவகாரத்தை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாம் என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.
நட்பு ரீதியில் தீர்வு
அத்துடன் நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது, வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்துங்கள். இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. பிரச்சனைகளை பொதுக்குழுவில் பேசிக்கொள்ளுங்கள்.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.