கூடிய சீக்கிரம் தமிழகத்தில் ராமராஜ்ஜியத்தை அமைப்போம் : செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

admk sellurraju
By Irumporai Apr 04, 2022 06:47 AM GMT
Report

தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியத்தை அதிமுக உருவாக்கும் என்று முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ  :

சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. வாக்களித்த மக்களுக்கு இந்த அளவுக்கு யாரும் துரோகம் செய்ய மாட்டார்கள். சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக மக்களுக்கு அளித்த பரிசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு சொத்து வரி உயர்வு தான் எனக் கூறினார்.

அதிமுகவின் திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதுடன், திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல் ஏறி வருகிறது. மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அரங்கேறி வருகிறது.

கடந்த 11மாத காலமாக மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. சொத்து வரி உயர்வு குறித்து திமுக அமைச்சர் நேரு கூறும்போது, பிப்ரவரி 31-ஆம் தேதிக்குள் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்ற மத்திய அரசு கூறியதாக கூறியுள்ளார்.

கூடிய சீக்கிரம் தமிழகத்தில் ராமராஜ்ஜியத்தை அமைப்போம்  : செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி | Admk Ex Minister Sellur Raju Press Meet

எந்தக் காலத்திலாவது பிப்ரவரி 31ம் தேதி வந்துள்ளதா ?என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், " 10 ஆண்டுகாலம் அதிமுக நடத்தியது ராமராஜ்யம். அதிமுக ஆட்சியில் அனைத்து மக்களும் சுபிட்சமாக வளமாக வாழ்ந்தனர் . தற்போது திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது.

விரைவில் தமிழகத்தில் ராமராஜ்யம் வரும் . தமிழகம் ராமராஜ்யம் ஆக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும். நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதான இடத்தை பிடிப்பார் என்பது பகல் கனவு "என்றார்