ரஜினி, கமல் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நல்லது; இதனால்தான் விஜய்,அஜித் அதை செய்தனர் - ஜெயக்குமார்!

Kamal Haasan Rajinikanth Tamil Cinema Tamil nadu D. Jayakumar
By Jiyath Jan 08, 2024 05:14 AM GMT
Report

ரஜினி, கமல் இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரு.கருணாநிதி அவர்களால் தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் திரு.ரஜினிகாந்த் மற்றும் திரு.கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்.

ரஜினி, கமல் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நல்லது; இதனால்தான் விஜய்,அஜித் அதை செய்தனர் - ஜெயக்குமார்! | Admk D Jayakuma X Post About Rajini And Kamal

இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று! புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.

நான் தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரானேனா? பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி!

நான் தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரானேனா? பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி!

யாராலும் மாற்ற முடியாது

ஆயிரமாண்டு கடந்தாலும் அவர் தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது! அவரது உதவியால் தான் கருணாநிதியே முதலமைச்சரானார்.

ரஜினி, கமல் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நல்லது; இதனால்தான் விஜய்,அஜித் அதை செய்தனர் - ஜெயக்குமார்! | Admk D Jayakuma X Post About Rajini And Kamal

சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே? இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான திரு.விஜய் மற்றும் திரு.அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர். #TheGOATMGR" என்று பதிவிட்டுள்ளார்.