கீர்த்தி சுரேஷின் காதல் : முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர்

By Irumporai Mar 29, 2023 04:37 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் குறித்து அடிக்கடி சில வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து முதல் முறையாக, கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மனம் திறந்து பேசியுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ்,

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' படத்தின் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். பின்னர், மீண்டும் இரண்டாவது முறையாக... சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெமோ படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோரான.பழம்பெரும் நடிகை மேனகா மற்றும் சுரேஷ் அண்மையில் ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றை அளித்திருந்தனர்.

அதில் அடிக்கடி செய்தி தலைப்பாகும் கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவரின் பெற்றோர், “சினிமாத் துறையைப் பொருத்தவரையில் இவ்வாறான பேச்சுக்கள், மற்றும் கிசுகிசுக்கள் அதிகம் எழுவது வழக்கமான ஒன்று தான்.

அவர் உண்மையில் யாரையாவது காதலித்தால், அதை எங்களிடமே வந்து சொல்லப் போகிறாள். நாங்கள் அதை அனைவருக்கும் தெரிவிக்கத்தான் போகிறோம். என கூறியுள்ளனர். இப்படி பட்ட பேச்சுகள் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பதன் அர்த்தம். எனவே நாங்கள் இதனை பெரிதாக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளனர்