விபத்தில் தோழி உயிரிழப்பு - நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

Tamil Cinema Yashika Aannand Accident
By Thahir Mar 27, 2023 08:28 AM GMT
Report

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர் 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு நள்ளிரவு சென்னை திரும்பி கொண்டிருந்த போது மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது.

actress-yashika-aannand-appeared-in-court

இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நடிகை யாஷிகா ஆனந்த் குடிபோதையில் அதிவேகமாக 130 கி.மீ வேகத்தில் காரை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

actress-yashika-aannand-appeared-in-court

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் யாஷிகா ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி ஆஜராகியுள்ளார்.