குளத்தில் காலை கழுவிய நடிகை - குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை!
நடிகை குளத்தில் காலை கழுயியதால் சர்ச்சை வெடித்துள்ளது.
ரீல்ஸால் சர்ச்சை
கேரளாவை சேர்ந்த யு டியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாபர். இவர் மலையாள, 'பிக்பாஸ் டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர்.
இவர் சமீபத்தில் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள குளத்தில் தன் கால்களை சுத்தம் செய்தவாறு ரீல்ஸ் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
கோவில் நடவடிக்கை
தொடர்ந்து ஏராளமானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும் கூறி, தேவஸ்தான நிர்வாகிகள் போலீஸில் புகாரளித்தனர்.
இதனையடுத்து ஜாஸ்மின் தன் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கோரினார். தற்போது நேற்று துவங்கி ஆறு நாள் பரிகார பூஜை செய்யவும்,
அப்போது கோவிலில் 18 சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என்றும் இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் தரி சனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டர் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.