வாழவே பிடிக்கல அனாதை போல இருக்கேன் : மனம் உடைந்து பேசிய நடிகை விசித்ரா

By Irumporai Mar 16, 2023 08:41 PM GMT
Report

என்னுடைய தாய், தந்தை இல்லாததால் எனக்கு அனாதை போல் உணர்வு ஏற்படுகிறது என நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.

நடிகை விசித்ரா  

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் கவர்ச்சி நடிகை விசித்ராவும் ஒருவர். 15 வயது ஆகும்போதே சினிமாவில் நுழைந்து விட்டார். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக களத்தில் இறங்கிய இவர். பின்வரும் நாட்களில் கதாநாயகி, வில்லி, டான்சர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.

வாழவே பிடிக்கல அனாதை போல இருக்கேன் : மனம் உடைந்து பேசிய நடிகை விசித்ரா | Actress Vichithra Spoke With Emotion Sad Life

குக் வித் கோமாளி 

தற்போது பிரபல நிகழ்ச்சிக்கான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று வருகிறார். திடீரென சில நாட்கள் அந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவரது நிலை குறித்து பேட்டி ஒன்றில் தெளிவாக எடுத்துரைத்தார்.

அநாதை போல இருக்கேன்

என்னுடைய அம்மாவிற்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் வலியில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தார். பின்னர் சில நாட்களில் உயிரிழந்து விட்டார். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்தாலும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். என்னுடைய அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை எனக்கு ஒரு அனாதை போல் உணர்வு ஏற்படுகிறது. 

இந்த மன நிலைமையில் தான் என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என வருத்தத்துடன் நடிகை விசித்ரா தெரிவித்தார்