ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்து; ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை - ஏன் தெரியுமா?
நடிகை காஞ்சனா தனது சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதிக்கு எழுதி வைத்துள்ளார்.
நடிகை காஞ்சனா
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா(85). எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்தர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு கன்னடா என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். 46 ஆண்டுகளாக சினிமாவில் ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார். கடந்த ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் பாட்டியாக நடித்திருந்தார்.
தற்போது வரை திருமணம் ஆகவில்லை. சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் சொத்துகளை வாங்கியுள்ளார். அதனை அவரது உறவினர்கள் அபகரித்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
சொத்து வழக்கு
மேலும் அந்த சொத்துகள் மீண்டும் தனக்கு திருப்பி கிடைத்தால் திருப்பதி வெங்கடாசலபதிக்கு எழுதி வைப்பதாக வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த சொத்து வழக்கில் இவருக்கு சாதகமான தீர்ப்பு வரவே, ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துள்ளேன்.
முதுமைடைந்து அல்லது உடல் ரீதியாக செயல் இழந்து போகும் தான் இந்த வயதில் உயிர் வாழ்வது உண்மையிலே எவ்வளவு பெரிய அதிசயம் என்று நான் உணர்கிறேன். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.