ஊஊ சொல்றியாவுக்கு ரெஸ்ட்.. வருது கலரு கோழிக்குஞ்சு : டான்ஸ் ஆடும் வனிதா
தன்னுடைய முதல் ஐட்டம் சாங்கை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகை வனிதா. பாடல் குறித்து சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார் .
ஊ சொல்றியா மாமா.. என பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பினார் சமந்தா. படத்தின் நாயகியையே ஓரம் போக வைக்கும் அளவுக்கு ஒரே ஐட்டம் பாடல் மூலம் சமந்தா வரவேற்பை பெற்றார்.
அதேபோல் நடிகை ரெஜினாவும் ஒரு ஐட்டம் பாடலில் ஆடினார். தெலுங்கு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகை வனிதா. காத்து என்ற படத்தின் ஐட்டம் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளார் வனிதா.
இது குறித்து தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர் இது தன்னுடைய முதல் ஐட்டல் பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். ’கலரு கோழிக்குஞ்சு’ என்று தொடங்கும் இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தற்போது மீண்டும் சினிமாத் துறைக்குள் நுழைந்துள்ளார். பவர் ஸ்டாருடன் இவர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தொடர்பான செய்தி முன்னதாக ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.