மத்தவங்க சொல்றதை காதில் வாங்காதீங்க : நயன்தராவுக்கு அட்வைஸ் பண்ண வனிதா
மத்தவங்க சொல்றதை காதில் வாங்காதீங்க என நயன்தாராவுக்கு நடிகை வனிதா அறிவுரை கூறியுள்ளார்.
நயன் விக்கி குழந்தைகள் விவகாரம்
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து நேற்று தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தனர். இதற்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதே சமயம் திருமணமாகி நான்கே மாதத்தில் குழந்தையா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர், அதேபோன்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தால் நயன்தாராவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
வனிதா ஆதரவு
ஆனால் ,இணையவாசிகள் சிலர் வாடகை தாய் மூலம் குழந்தை ஈன்றதுக்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன , இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடிகை வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இருவரும் ஒரு அழகான பயணத்தை தொடங்கியுள்ளீர்கள். மற்றவர்கள் கூறுவதை காதில் வாங்காதீர்கள். உங்கள் முடிவு மிகவும் சரியானது.
You think you morons are going to get away with all this ?wait and watch..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 11, 2022
அதனால் அதை கொண்டாடி மகிழுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் நிலவு எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது.

வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி) IBC Tamil
