பிரபல நடிகை படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை... - துணை நடிகர் அதிரடி கைது...! - ரசிகர்கள் ஷாக்..!

Death
By Nandhini Dec 25, 2022 07:09 AM GMT
Report

படப்பிடிப்பு தளத்தில் 20 வயதான பிரபல நடிகை துனிஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இணை நடிகையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை துனிஷா தற்கொலை

‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20).

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மதியம் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடிகை துனிஷா ஷர்மாவின் உடல் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. "பிரேத பரிசோதனை அதிகாலை 4:30 மணி வரை நடத்தப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையில் 4-5 போலீசாரும் உடனிருந்தனர்.

actress-tunisha-sharma-death

துணை நடிகர் கைது

இந்நிலையில், போலீசார் நடிகை துனிஷாவின் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நடிகை துனிஷா ஷர்மா தூக்கில் தொங்கியதாகக் கூறப்படும் இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக இணை நடிகர் ஷீசன் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, நடிகர் ஷீசன் கானை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை துனிஷா ஷர்மாவின் மரணம் வழக்கு, கொலை மற்றும் தற்கொலை ஆகிய இரு கோணங்களில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வைரலாகும் கடைசி பதிவு

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, துனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நடிகை துனிஷாவிற்கு மேக்கப் போடும் ஒப்பனை கலைஞர், படப்பிடிப்பிற்காக போலியாக துனிஷாவின் மணிக்கட்டை வெட்டுகிறார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில், இரங்கல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.