நயன்தாராவின் இடத்தை பிடித்த த்ரிஷா - அதிர்ச்சியில் புலம்பும் திரைத்துரையினர்

Trisha
By Irumporai Oct 31, 2022 10:30 PM GMT
Report

பொன்னியின் செல்வன்படத்தில் நடித்தன் மூலாமாக மீண்டும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகமாக்கியுள்ளார், ஆகவே தற்போது தனக்கு வரும் படத்திற்கு ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா  

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி,கமல், விக்ரம் , விஜய், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் திரிஷா.

நயன்தாராவின் இடத்தை பிடித்த த்ரிஷா - அதிர்ச்சியில் புலம்பும் திரைத்துரையினர் | Actress Trisha Raised Salary Tamil Cinema

இந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் , இது வரை தமிழ் சினிமா பார்க்காத வசூல் சாதனையினை செய்கிறது. குந்தவையாக நடித்த திரிஷாவின் நடிப்பினை ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே கொண்டாடி வருகின்றது. 

அதிகரிக்கும் பட வாய்ப்பு

ஆகவே பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

3 கோடி சம்பளம்

ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் உயர்ந்துள்ளதால் தற்போது ஒரு படத்திற்கு ரூ 3 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் சினிமா இயக்குநர்கள் சிலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நயன்தாராவின் இடத்தை பிடித்த த்ரிஷா - அதிர்ச்சியில் புலம்பும் திரைத்துரையினர் | Actress Trisha Raised Salary Tamil Cinema

அதே சமயம் , செவி வழி செய்தியாக பரவும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை திரிஷா உறுதி செய்யவில்லை