செல்ல மகளுக்கு பெயர் சூட்டிய சீரியல் நடிகை - என்ன பெயர் தெரியுமா?
பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக், தனது செல்ல மகளுக்கு பெயர் சூட்டி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரபல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் போதிய வாய்ப்பின்மையால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை இவர், 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ஒளிப்பதிவாளர் அசோக் சின்தலாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
நடிகை ஸ்ரீதேவி அசோக், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், தனது கணவருடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவி அசோக்குக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்த குழந்தைக்கு நேற்று பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளனர்.
இதில், சித்தாரா என்று குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விழாவின் புகைப்படங்களை நடிகை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.