“அவரு நிஜமாவே குழந்தை மாதிரி தான்; எல்லோரையும் சிரிக்க வச்சுட்டே இருப்பாரு” - முன்னணி நடிகரை புகழ்ந்து தள்ளிய சினேகா
கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த். அதன் பின்னர் ஒரு சில மலையாள படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்த பிரஷாந்த் தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் திருட திருட, ராசா மகன், செந்தமிழ் செல்வன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வின்னர் என பல படங்களில் நடித்து 90 மற்றும் 2000 காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக கொடிகட்டி பறந்தார்.
இவர் தமிழில் கடைசியாக கடந்த 2018-ல் வெளிவந்த ஜானி படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவரது நடிப்பில் அந்தகன் திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. அந்தகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ள பிரசாந்த் அப்படத்தின் புரமோஷன் வேளைகளில் தந்தை தியாகராஜனுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை சினேகா. தனக்கும் பிரசாந்திற்கும் இருக்கும் நட்பு குறித்தும் , பிரசாந்தின் கேரக்டர் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது,
"என்னுடைய முதல் ஹீரோ பிரசாந்த்தான். இவர் என்னை முதல் படத்துல எவ்வளவு கலாய்க்க முடியுமோ அவ்வளவு கலாய்ச்சுட்டாரு. அதன் பிறகு யாரு என்னை கலாய்த்தாலும் ஜாலியாகத்தான் இருந்தது. அவரை முதல் முதலாக பார்க்கும் பொழுது பிகப்பெரிய ஸ்டார். ஆனால் அவர் கூட நடிக்க எந்தவொரு தயக்கமும் இல்லை.
ரொம்ப ஜாலியா பேச ஆரமிச்சுட்டாரு. நாங்க தினமும் பேசக்கூடியவர்கள் கிடையாது. ஆனால் எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போதெல்லாம் எங்களுடைய ஃபிரண்ட்ஷிப் கிளிக் ஆகிடும். பிரசாந்த் ஒரு பன்முக திறமை கொண்ட மனிதர். எதைப்பற்றி கேட்டாலும் பதில் சொல்லுவார்.
சூரியன் , ஏர்கிராஃப்ட் , மேக்கப் அப்படினு எதை பற்றி கேட்டாலும் அறிவுப்பூர்வமாக பேசுவார். அதனால தான் தான் என்ற அகந்தை அவருக்கு இருந்தது கிடையாது அதுதான் பிரசாந்திடம் எனக்கு ரொம்ப பிடித்தது. முதல் படத்துல நடிக்க போனப்போ பெரிய ஹீரோவோட நடிக்க போறோமேனு எனக்கு கை-கால் எல்லாம் நடுங்கியது. ஆனால் அவர் அவ்வளவு கம்ஃபர்ட்டா வச்சிருந்தாரு.
பிரசாந்த் மனசு நிஜமாவே குழந்தை மாதிரித்தான். எல்லோரையும் சிரிக்க வச்சுட்டே இருப்பாரு. பிரசாந்த் வந்தாலே செட் ரொம்ப கல கலன்னு இருக்கும். யாரை பற்றியும் பேசமாட்டாரு.. பிரசாந்த் மேல எனக்கு நிறைய அன்பும் மரியாதையும் இருக்கு. பிரசாந்துடன் நடித்தவர்களில் எனக்கு பிடித்த ஜோடி சிம்ரன்தான்.
இருவரும் இணைந்து நிறைய படங்கள் பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுமட்டுமல்ல ஐஸ்வர்யா ராய் , ஜீன்ஸ் படத்துல அவ்வளவு அழகா இருப்பாங்க. அதுல அவங்களுக்கு பொருத்தமான ஹீரோனா பிரசாந்த் -தான் . “என சினேகா பேசியிருக்கிறார்.