முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அண்ணன் என கூப்பிட்ட பிரபல நடிகை : குஷியில் தொண்டர்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கச் சென்ற போது, தன்னுடன் வந்தவர்கள் அவரை தலைவர் என்றும் தளபதி என்றும் அழைக்கச் சொன்னதாகவும் ஆனால் அவரை தாம் 'அண்ணா' என அழைத்ததாகவும் நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஷோபனா, தாம் சினிமா துறையில் இருப்பதால் அதிமுக ஆட்சியில் கோவில்களில் ஆவணப் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகவும் .
திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆவணப்பட எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் தனக்கு அனுமதி கிடைத்ததாகவும் பாராட்டினார். முதலில் திமுக அரசு மீதும் தமக்கு நம்பிக்கையில்லாமல் தான் விண்ணப்பித்ததாகவும் ஆனால் எதிர்பாராத வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய ஷோபனா , முதலமைச்சர் ஸ்டாலினை தாம் சந்தித்து பேசச் சென்ற போது, அவரை என்ன சொல்லி அழைப்பது என தாம் குழம்பியதாகவும் அப்போது தன்னுடன் வந்தவர்கள் 'தலைவர்' என்றும் 'தளபதி' எனவும் அழைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறினார்.
ஆனால் தாம் அவரை 'அண்ணா' என அழைத்ததாகவும் தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டுவதாகவும் புகழாரம் சூட்டினார்.
பல சினிமா பிரபலங்கள் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி அவருக்காக அமைச்சர் சேகர்பாபு நடத்தும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாராட்டி வருவது திமுக தொண்டர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.